/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.1,400க்கு விற்ற குண்டுமல்லி
/
தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.1,400க்கு விற்ற குண்டுமல்லி
தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.1,400க்கு விற்ற குண்டுமல்லி
தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.1,400க்கு விற்ற குண்டுமல்லி
ADDED : அக் 31, 2024 12:12 AM
நாமக்கல்:தீபாவளி
பண்டிகையையொட்டி, நாமக்கல் பூ மார்க்கெட்டில், பூக்கள் விலை
பலமடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ குண்டு மல்லி, 1,400 ரூபாய்க்கு
விற்பனையானது.
நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான
அணியாபுரம், மோகனுார், எருமப்பட்டி, வரகூர் உள்ளிட்ட பகுதிகளில்,
குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, அரளி, ரோஸ், ஜாதி மல்லி, கொண்டை பூ
உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.அவற்றை, அறுவடை
செய்து, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் தினசரி
ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். விசேஷ நாட்களான திருமணம்,
திருவிழா, ஆயுதபூஜை, தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில், பூக்கள்
விலை உயர்வும், சாதாரண நாட்களில், குறைவதும் வாடிக்கை.
அதேபோல்,
உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களில், விலை சரிவும், குறையும்
நிலையில், விலை அதிகரிக்கும்.தற்போது, தீபாவளி பண்டிகையையொட்டி,
பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம், ஒரு கிலோ
குண்டுமல்லி, 280 ரூபாய், முல்லை, 140 முதல், 180 ரூபாய், சம்பங்கி, 40
ரூபாய், அரளி, 100 ரூபாய், ரோஸ், 60 ரூபாய், ஜாதி மல்லி, 320 ரூபாய்க்கு
விற்பனையானது. நேற்று, குண்டுமல்லி, 1,400 ரூபாய், முல்லை, 1,000
முதல், 1,200 ரூபாய், சம்பங்கி, 160 ரூபாய், அரளி, 230 ரூபாய், ரோஸ், 120
ரூபாய், ஜாதிமல்லி, 600 ரூபாய்க்கு ஏலம் போனது. தீபாவளி
பண்டிகையையொட்டி பூக்கள் தேவை அதிகரித்துள்ளதால், அதன் விலையும்,
பலமடங்கு உயர்ந்துள்ளது. அதனால், விவசாயிகள், வியாபாரிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.