sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி ரூ.700க்கு விற்ற குண்டுமல்லி

/

ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி ரூ.700க்கு விற்ற குண்டுமல்லி

ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி ரூ.700க்கு விற்ற குண்டுமல்லி

ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி ரூ.700க்கு விற்ற குண்டுமல்லி


ADDED : ஆக 03, 2024 01:36 AM

Google News

ADDED : ஆக 03, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



ப.வேலுார், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, ப.வேலுாரில் நேற்று நடந்த பூக்கள் ஏலத்தில், குண்டுமல்லி கிலோ, 700 ரூபாய்க்கு விற்பனையானது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். தற்போது குண்டுமல்லி விளைச்சல் குறைந்துள்ளது.

இந்நிலையில், இன்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, நேற்று ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்தில் நடந்த ஏலத்தில், கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற ஒருகிலோ குண்டுமல்லி, நேற்று 700 ரூபாய், 50 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 280 ரூபாய், 70 ரூபாய்க்கு விற்ற அரளி, 220 ரூபாய், 80 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 200 ரூபாய், 300 ரூபாய்க்கு விற்ற முல்லை, 600 ரூபாய்க்கு விற்பனையாகின.

ஆடி, 18 விழாவை முன்னிட்டு பூக்கள் தேவை அதிகரித்ததால், விலை உயர்ந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us