sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'இ-பைலிங்' முறை கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

/

'இ-பைலிங்' முறை கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

'இ-பைலிங்' முறை கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

'இ-பைலிங்' முறை கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு


ADDED : டிச 09, 2025 05:17 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'இ--பைலிங்' முறையை கட்டாயமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து, நாமக்கல் வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும், நீதிமன்றங்களில் டிஜிட்டல் முறையில் வழக்குகள் பதிவு செய்யும், 'இ- பைலிங்' முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், போதிய கட்டமைப்பு வசதிகளான இணையதள வசதி, கணினிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்' எனக்கோரி, தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டத்தில்

ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டுக்குழு சார்பில், பணி புறக்கணிப்பு செய்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுக்குழு மாநில துணைத்தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். 'இ--பைலிங்கிற்கான போதிய இணையதள வசதி, தொழில் நுட்ப திறன் கொண்ட நீதிமன்ற ஊழியர்களை நியமிக்க வேண்டும். இ--பைலிங்கிற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வரை, பழைய நடைமுறையை பயன்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர். வக்கீல்கள் சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். நீதிமன்ற பணி புறக்கணிப்பு காரணமாக, வழக்கமாக பணிகள் முடங்கியது.

* திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வக்கீல்கள் சங்க தலைவர் ரவி தலைமை வகித்தார். அதில், 35க்கும் மேற்பட்ட ஆண், பெண் வக்கீல்கள் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.

* ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் தங்கதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வரும், 12 வரை வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us