/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
/
வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
ADDED : ஜூன் 12, 2025 01:39 AM
குமாரபாளையம், குமாரபாளையத்திலிருந்து பள்ளிப்பாளையம் செல்லும் வழியில், எம்.ஜி.ஆர்., நகர் பஸ் ஸ்டாப் அருகே நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. குமாரபாளையம், பள்ளிப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக வந்து செல்கின்றனர். வழக்கம்போல் பொதுமக்கள் தங்கள் வாய்தா தேதி என்பதால், நீதிமன்றத்திற்கு நேற்று காலை, 10:00 மணிக்கு வந்தனர்.
இந்நிலையில், திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தின், வக்கீல் சங்க உறுப்பினர் மணி என்பவரை தாக்கியவர்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் மட்டும், திருச்செங்கோடு வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், குமாரபாளையம் வக்கீல் சங்க உறுப்பினர்களை கேட்டுக்கொண்டனர். இதனால், குமாரபாளையம் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.