sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மண் கடத்திய லாரி பறிமுதல்: உரிமையாளர், டிரைவருக்கு வலை

/

மண் கடத்திய லாரி பறிமுதல்: உரிமையாளர், டிரைவருக்கு வலை

மண் கடத்திய லாரி பறிமுதல்: உரிமையாளர், டிரைவருக்கு வலை

மண் கடத்திய லாரி பறிமுதல்: உரிமையாளர், டிரைவருக்கு வலை


ADDED : ஏப் 18, 2025 01:52 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, கொண்டம்பட்டி பகுதியில் தொடர்ந்து கிராவல் மண் வெட்டி எடுப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் உத்திரவுப்படி, சிதம்பரப்பட்டி வி.ஏ.ஓ., சுதா, உதவியாளர் ஜென்சியா ஆகியோர், நேற்று அதிகாலை கொண்டம்பட்டிமேடு பைபாஸ் சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிவியாம்பாளையம் ஊருக்குள் இருந்து கொண்டம்பட்டி மேட்டை நோக்கி சென்ற டிப்பர் லாரியை, வருவாய்த்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மூன்று யூனிட் கிராவல் மண் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வருவாய்த்துறையினர் லாரி டிரைவரிடம் மண் கொண்டு செல்வதற்கான ஆவணங்களை கேட்டனர். வண்டியில் உள்ள ஆவணத்தை எடுக்க சென்ற டிரைவர் தப்பி ஓட்டம் பிடித்தார். வி.ஏ.ஓ., கொடுத்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளர், டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us