ADDED : மார் 29, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: எருமப்பட்டி, அலங்காநத்தம் பஞ்., கெஜகோம்பையில் அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி கடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, வி.ஏ.ஓ., செல்வம் அப்பகுதியில் ஆய்வு செய்தார்
. அப்போது, கெஜகோம்பையில் இருந்து கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி விசாரணை நடத்தினார். அதில், அரசு அனுமதியின்றி மண் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.