/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பைக் மீது கார் மோதி லாரி உரிமையாளர் பலி
/
பைக் மீது கார் மோதி லாரி உரிமையாளர் பலி
ADDED : மே 05, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார்: மோகனுார் அடுத்த வளையப்பட்டி வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகேசன், 45; லாரி உரிமையாளர். இவர், நேற்று காலை, 8:30 மணிக்கு, வளையப்பட்டி பகுதியில் இருந்து,
வ.உ.சி., நகர் செல்-வதற்காக, 'ஹோண்டா' பைக்கில் புறப்பட்டார். அப்போது, எதிரே வந்த கார், பைக் மீது மோதி விபத்துக்குள்ளா-னது. படுகாயமடைந்த முருகேசனை, அக்கம் பக்கத்தில் இருந்த-வர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து-விட்டதாக தெரிவித்தனர். மோகனுார் போலீசார் விசாரிக்கின்-றனர்.