ADDED : செப் 09, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், போடிநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 65; இவர், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோம்பைக்காடு பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ஆறுமுகம், 5 லிட்டர் சாராயத்தை மறைத்து வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், அவரை கைது செய்தனர்.