/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையை கடக்க முயன்றவர் லாரி மோதியதில் பலி
/
சாலையை கடக்க முயன்றவர் லாரி மோதியதில் பலி
ADDED : ஜூலை 02, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார், திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, கிடாரத்தை சேர்ந்தவர் கந்தசாமி, 56. இவர், நேற்று முன்தனம் இரவு, 11:00 மணிக்கு, நாமக்கலில் இருந்து திருச்சி செல்லும் சாலை வளையப்பட்டி பஸ் ஸ்டாப் அருகில், சாலை கடக்க நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அவ்வழியாக வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மோகனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

