/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்
/
தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்
தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்
தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்
ADDED : நவ 14, 2024 07:19 AM
நாமக்கல்: புத்தாக்க சிந்தனை உள்ள மாணவர்களை, இளம் தொழில் முனை-வோராக வளர்த்தெடுக்கும் நடவடிக்கையில், தமிழக அரசு ஈடு-பட்டுள்ளது. இதற்காக, 'ஸ்டார்ட் அப் சென்னை -செய்க புதுமை' திட்டத்தை, சென்னை ஐ.ஐ.டி.-எம்., ஆராய்ச்சி பூங்காவில், நேற்று முன்தினம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு கல்வி நிறுவ-னங்களில், 'தொடக்க நிலை வளர் காப்பகம்' அமைப்பதற்கான ஒப்புதல் ஆணையையும் வழங்கினார்.
இதில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் பொறி-யியல் கல்லுாரி, 'தொடக்கநிலை வளர் காப்பகம்' அமைக்க உள்-ளது. இதற்கான ஆணையை, எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் மதன்கார்த்திக்,
துணை முதல்வர் உதயநிதி-யிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து அவர் கூறுகையில், ''கல்வி நிறுவனங்களில் புத்தாக்க சிந்தனை உள்ள மாணவர்களை, இளம் தொழில் முனைவோராக வளர்த்தெடுக்க பேருதவியாக இருக்கும். மாணவர் குழுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு
பலவிதமான சேவைகள் வழங்கப்-படும். தொடக்க நிலை வளர் காப்பக மையம், இக்கல்லுாரியில் குறுகிய காலத்தில் செயல்படும்,'' என்றார்.