/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை மருத்துவ முகாம் நாமக்கல், அக். 25-
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை மருத்துவ முகாம் நாமக்கல், அக். 25-
மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை மருத்துவ முகாம் நாமக்கல், அக். 25-
மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை மருத்துவ முகாம் நாமக்கல், அக். 25-
ADDED : அக் 25, 2024 01:11 AM
மாற்றுத்திறனாளிகளுக்கு
நாளை மருத்துவ முகாம்
நாமக்கல், அக். 25-
நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்திலுள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், சிறப்பு மருத்துவ முகாம் நாளை (26ம் தேதி) காலை 10:00 மணிக்கு, எருமப்பட்டி சரசு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
முகாமில், குழந்தைகள் நல மருத்துவர், காது, மூக்கு தொண்டை நிபுணர், எலும்புமுறிவு சிகிச்சை மருத்துவர், மனநல சிகிச்சை மருத்துவர், கண் சிகிச்சை மருத்துவர் மற்றும் செவித்திறன் பரிசோதகர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொள்வர். மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக அடையாள அட்டை வழங்குதல், ஏற்கனவே உள்ள அடையாள அட்டை புதுப்பித்தல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு, ஆதார் அட்டை பதிவு, யு.டி.ஐ.டி., அட்டை வழங்குதல், புதிய வங்கி கணக்கு தொடங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, வங்கி கடன் மானியம், இலவச பயண அட்டை மற்றும் அனைத்து வகையான உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பம், இ-சேவை மையம் மூலம் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன் பெறலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.