/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மைக் செட் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
/
மைக் செட் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
ADDED : ஆக 28, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்,அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன், 54; மைக் செட் தொழிலாளி. நேற்று காலை, அந்தியூர் பவானி ரோட்டிலுள்ள மண்டபத்தில், மைக் செட் பொருத்தும் வேலைக்கு சென்றார்.
வேலையை முடித்துவிட்டு, மண்டபத்தின் எதிரில் உள்ள விநாயகர் கோவில் முன் நின்று கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து, அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.