ADDED : நவ 24, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார்: மோகனுார் அடுத்த ஒருவந்துார் பஞ்.,க்குட்பட்ட வடுகபட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி, 75. இவர், அந்த பகுதியில் உள்ள தமிழ-ழகன் என்பவரின் விவசாய தோட்டத்தில் தங்கி தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த, 20ல், தோட்-டத்திற்கு சென்றவர் காணவில்லை.
உறவினர்கள் மற்றும் குடும்பத்தார், அவரை பல்வேறு இடங்-களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, மோகனுார் காவிரி ஆற்றங்கரை பகுதியில் ஆண் சடலம் காணப்பட்டுள்ளது. தகவலறிந்த மோகனுார் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், காணாமல் போன சுப்ரமணி என்பது தெரியவந்தது. மோகனுார் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

