ADDED : பிப் 16, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் அடுத்த வீசாணத்தை சேர்ந்தவர் ஆர்த்தி, 35; இவர், நேற்று முன்தினம் நாமக்கல் மாநகராட்சி செலம்ப கவுண்டர் பூங்-காவிற்கு மொபட்டில் சென்றுள்ளார். மொபட்டை சாலையோரம் நிறுத்தி விட்டு, பூங்காவிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த-போது, மொபட்டை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, நாமக்கல் போலீசில் ஆர்த்தி அளித்த புகார்படி, போலீசார் விசா-ரணை நடத்தினர்.
தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, பெரியப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த மெக்கானிக் பழனிசாமி, 65, என்-பவர் மொபட்டை திருடிச்சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.