sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியதால் பரபரப்பு

/

தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியதால் பரபரப்பு

தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியதால் பரபரப்பு

தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியதால் பரபரப்பு


ADDED : அக் 06, 2024 03:25 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்துள்ள குமாரமங்கலத்தில், ஆள் இல்-லாத தோட்டத்தில் மர்ம நபர்கள் புகுந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் அருகே, மண்டகபா-ளையம் கிராமத்திற்கு உட்பட்ட பள்ளிகாடு என்ற பகுதியில், செங்கோட்டையன் லட்சுமி தம்பதிகள் மூன்று ஏக்கர் தோட்-டத்தில் மா, கொய்யா, தேக்கு உள்ளிட்ட மரங்களை வளர்த்து வந்தனர். சென்னையில் வசித்து வரும் அவர்கள், இரண்டு மாதங்-களுக்கு ஒரு முறை திருச்செங்கோடு வந்து தோட்டத்தில் உள்ள மரங்களை பராமரித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.இந்நிலையில், செங்கோட்டையன் தோட்டத்தில் வைத்து பரா-மரிக்கபட்டு வந்த பலா, கொய்யா, தென்னை, மகாகனி போன்ற உயர்ரக விலை உயர்ந்த மரங்களை மர்ம நபர்கள் சிலர் நேற்று அதிகாலை நேரத்தில் வெட்டியதோடு, தோட்டத்திற்கு பாதுகாப்-பிற்காக சுற்றி அமைத்து இருந்த கம்பி வேலியையும் பிடுங்கி உள்ளனர். அக்கம் பக்கத்தினர் சென்னையில் உள்ள செங்கோட்-டையனுக்கு தகவல் தந்துள்ளனர்.

இதையடுத்து, சென்னையில் இருந்து வந்த செங்கோட்டையன், திருச்செங்கோடு ரூரல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.






      Dinamalar
      Follow us