sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ப.வேலுாரில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

/

ப.வேலுாரில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

ப.வேலுாரில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

ப.வேலுாரில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்


ADDED : நவ 16, 2025 02:30 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. தற்போது, பருவநிலை மாற்றத்தால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். இதனால், ப.வேலுார், வெட்டுக்காட்டு புதுார், காவேரி நகர் ஆகிய பகுதிகளிலும், ப.வேலுார் டவுன் பஞ்., முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியை செயல் அலுவலர் சண்முகம், நேற்று துவக்கி வைத்தார். துப்புரவு அலுவலர் செல்வகுமார், தலை-மையில் துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் மருந்து தெளித்தும், கொசு ஒழிப்பு மருந்து அடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ப.வேலுார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீட்டை சுற்றியுள்ள உடைந்த தேங்காய் சிரட்டைகள், ஆட்டுக்கல். கடை-களில் உள்ள பழைய டயர்கள் ஆகியவற்றில் மழை நீர் தேங்கி இருந்ததை அகற்றினர். வீடு, வீடாக சென்று தண்ணீர் சேமிப்பு டேங்குகளில், புழு உற்பத்தியை தடுக்கும் மருந்து ஊற்றினர். 'வீடு, கடைகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றால், கொசு உற்பத்-திக்கு வழி வகுக்கும். அதனால், மழைநீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என, ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் சண்முகம் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us