/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகள் சாவில் மர்மம் போலீசில் தாய் புகார்
/
மகள் சாவில் மர்மம் போலீசில் தாய் புகார்
ADDED : ஆக 15, 2025 03:22 AM
ஈரோடு, ஈரோடு, வெட்டுக்காட்டு வலசு, வேலப்பகவுண்டன் வலசை சேர்ந்தவர் பூபதி. கார்மென்ட்ஸ் நடத்துகிறார். இவர் மனைவி வினோதினி, 36; திருமணமாகி ஐந்து மாதங்களாகிறது. கடந்த, 13ம் தேதி காலை வீட்டில் இருந்த கிணற்றில் வினோதினி சடலமாக மிதந்தார். தீயணைப்பு துறையினர் மீட்ட நிலையில், வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் வினோதினியின் தாய் இந்திராணி, வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், திருமண வாழக்கை தனக்கு பிடிக்கவில்லை என்று மகள் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. தம்பதி இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டதால், அவ்வப்போது மருமகன் வீட்டுக்கு சென்று மகளுக்கு அறிவுரை சொல்லி வந்தேன்.
என் மகள் இறப்பில் சந்தேகம் உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார். உடற்கூறு பரிசோதனை அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடக்கும் என்று, போலீசார் தெரிவித்தனர்.