sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மருமகளுடன் சண்டையால் மன உளைச்சல் ஏரிக்கு சென்று தீக்குளித்து மாமியார் தற்கொலை

/

மருமகளுடன் சண்டையால் மன உளைச்சல் ஏரிக்கு சென்று தீக்குளித்து மாமியார் தற்கொலை

மருமகளுடன் சண்டையால் மன உளைச்சல் ஏரிக்கு சென்று தீக்குளித்து மாமியார் தற்கொலை

மருமகளுடன் சண்டையால் மன உளைச்சல் ஏரிக்கு சென்று தீக்குளித்து மாமியார் தற்கொலை


ADDED : நவ 19, 2024 06:56 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: மருமகளுடன் ஏற்பட்ட சண்டையால், மன உளைச்சலில் இருந்த மாமியார், ஏரி பகுதிக்கு சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி ஏரிக்கு, நேற்று காலை சென்ற மக்கள், அங்கு எரிந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடி-யாக, ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர், ராசி-புரம் வெங்கடசாமி தெருவை சேர்ந்த நடேசன் மனைவி சாந்தி, 65, என்பது தெரியவந்தது.

நடேசன், 35 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால், மகன் ராஜேந்திரனுடன், 44, சாந்தி வசித்து வந்துள்ளார். மகனின் திரும-ணத்திற்கு பின், மருமகள் மகேஸ்வரியுடன், அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டு மாடியில், சாந்தி தனியாக வசித்து வந்துள்ளார்.கடந்த, 15 நாட்களுக்கு முன், மீண்டும் சாந்திக்கும், மகேஸ்வ-ரிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், 200 மீட்டர் தொலைவில், வாடகை வீடு எடுத்து சாந்தி வசித்து வந்துள்ளார். தனியாக இருந்த சாந்தி, மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நி-லையில், நேற்று அதிகாலை, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும், மகன் ராஜேந்திரன் வீட்டு முன் கொண்டு வந்து வைத்துள்ளார். பின், அருகில் உள்ள ஏரிக்கு சென்று, மண்-ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.இதுதொடர்பாக, ராஜேந்திரன் வீட்டிற்கு அருகில் இருந்த, 'சிசி-டிவி' கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை பார்த்தபோது, சாந்தி மண்ணெண்ணெய் கேனுடன், ஏரி பகுதிக்கு நடந்து சென்-றது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களி-டையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us