sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடர அமைச்சரிடம் எம்.பி., வேண்டுகோள்

/

அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடர அமைச்சரிடம் எம்.பி., வேண்டுகோள்

அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடர அமைச்சரிடம் எம்.பி., வேண்டுகோள்

அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடர அமைச்சரிடம் எம்.பி., வேண்டுகோள்


ADDED : டிச 21, 2024 01:17 AM

Google News

ADDED : டிச 21, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், டிச. 21-

நாமக்கல்லில் இருந்து கத்தார், ஓமன், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு, பல ஆண்டுகளாக கோழி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது கத்தார், ஓமன் நாடுகளில் முட்டை இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால், நாமக்கல் பகுதியில் இருந்து ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட, 15 கோடி ரூபாய் மதிப்பிலான முட்டைகள்,

அந்நாட்டின் துறைமுகத்தில் இறக்கப்படாமல் கப்பலில் உள்ளது.

நாமக்கல்லில் இருந்து, ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகளை உடனே இறக்குமதி செய்யவும், அதேபோல் கத்தார் நாட்டில் முட்டை ஏற்றுமதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கவும், கோழிப்பண்ணையாளர்கள், முட்டை ஏற்றுமதியாளர்கள், எம்.பி., ராஜேஸ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

இதையடுத்து எம்.பி., ராஜேஸ்குமார், டில்லியில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை சந்தித்து, முட்டை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை கூறி, முட்டை ஏற்றுமதி தொடர்ந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகளை, துறைமுகத்திலிருந்து இந்த வார இறுதிக்குள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், கத்தார் நாட்டில் முட்டை ஏற்றுமதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க, இம்மாதம் அவர் கத்தார் நாட்டிற்கு செல்லும்போது, அந்நாட்டு அமைச்சருடன் பேசுவதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக, எம்.பி., ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us