sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல், சங்ககிரிக்கு கூடுதல் ரயில் வசதி மத்திய அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை

/

நாமக்கல், சங்ககிரிக்கு கூடுதல் ரயில் வசதி மத்திய அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை

நாமக்கல், சங்ககிரிக்கு கூடுதல் ரயில் வசதி மத்திய அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை

நாமக்கல், சங்ககிரிக்கு கூடுதல் ரயில் வசதி மத்திய அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை


ADDED : நவ 28, 2024 01:20 AM

Google News

ADDED : நவ 28, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், சங்ககிரிக்கு கூடுதல் ரயில் வசதி

மத்திய அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை

நாமக்கல், நவ. 28-

நாமக்கல் கொ.ம.தே.க., - எம்.பி., மாதேஸ்வரன், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில், சென்னை யில் இருந்து போடி வரை செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலை, நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி செல்ல உத்தரவு பிறப்பித்ததற்கு, நாமக்கல் பகுதி பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், பயணிகளின் நலன் கருதி, சேலம் - சென்னை எக்மோர் இடையே இயக்கப்படும் ரயிலை, சேலத்தில் இருந்து நாமக்கல் - மோகனுார் வழியாக, கரூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

பாலக்காட்டில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படும் மெமு ரயிலை கரூர், மோக னுார், நாமக்கல் வழியாக சேலம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இது, நாமக்கல் பகுதியில் உள்ளவர்கள் வியாபாரம், கல்வி, மருத்துவ சிகிச்சைக்காக ஈரோடு, திருப்பூர், கோவை செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். சென்னை சென்ட்ரல் - -கோவை இடையே இயக்கப்படும் தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சங்ககிரியில் நிற்பதில்லை. பயணிகள் நலன் கருதி, இந்த ரயிலை, சங்ககிரியில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us