/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்
ADDED : நவ 03, 2025 03:18 AM
பள்ளிப்பாளையம்,: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை பகுதியில் சுயம்பு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா, இன்று காலை நடக்கிறது.
இந்நிலையில், மதநல்லிணக்க ஒற்றுமையை வலுப்படுத்தும் வித-மாக, கொக்கராயன்பேட்டை அல் முகமதியா ஜாமியா மஜீத் முத்-துவல்லி ஜலில் தலைமையில், துணை முத்தவல்லி ஷேக்தாவூத், செயலாளர் காதர் மற்றும் நிர்வாகிகள், நேற்று மேளதாளம் முழங்க, மஞ்சள், குங்குமம், தேங்காய், வாழைப்பழம், பட்டுப்பு-டவை என, ஒன்பது சீர்வரிசை தட்டுகள், அன்னதானத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் ஆகியவை எடுத்து வந்தனர்.அப்போது, இஸ்லாமியர்களை இன்முகத்துடன் கோவிலுக்குள் வரவேற்ற கோவில் நிர்வாகிகள், அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் கொண்டு வரப்பட்ட சீர்-வரிசையை, கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர். இதையடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்தது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

