sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முத்துமாரியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்

/

முத்துமாரியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்

முத்துமாரியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்

முத்துமாரியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்


ADDED : ஜூலை 08, 2025 01:49 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார் மோகனுார் தாலுகா, பேட்டப்பாளையம் பஞ்.,க்குட்பட்ட கீழபேட்டபாளையத்தில், முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி மாதம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 29ல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, வடிசோறு வைத்து, அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி, தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்துக்கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தனர்.

தொடர்ந்து, மூலவர் மாரியம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, மாலை, 4:00 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து, உற்சவர் முத்துமாரியம்மன் கரகம், வேல் உள்ளிட்டவைகளை எடுத்து வந்து, கோவில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று கிடாவெட்டும், நாளை மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us