sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விமான நிலையத்தில் மர்ம பொருள் பிரிட்டனில் பெரும் பரபரப்பு

/

விமான நிலையத்தில் மர்ம பொருள் பிரிட்டனில் பெரும் பரபரப்பு

விமான நிலையத்தில் மர்ம பொருள் பிரிட்டனில் பெரும் பரபரப்பு

விமான நிலையத்தில் மர்ம பொருள் பிரிட்டனில் பெரும் பரபரப்பு


ADDED : நவ 23, 2024 01:43 AM

Google News

ADDED : நவ 23, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன், நவ. 23--

பிரிட்டன் விமான நிலைய வளாகத்தில் மர்ம பொருள் கைப்பற்றப்பட்டதால், பயணியர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் அருகே கேட்விக் விமான நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விமான நிலைய வளாகத்தில் நேற்று காலை மர்ம பொருள் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விமான நிலையத்தில் இருந்த பயணியரின் பாதுகாப்பு கருதி, அனைவரையும் உடனே வெளியேற்றினர். அத்துடன், விமான நிலையத்தையும் தற்காலிகமாக மூடினர்.

அதன்பின் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரின் உதவியுடன், விமான நிலைய வளாகம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். ஆறு மணி நேரத்திற்குபின் சோதனை நிறைவுற்ற நிலையில், எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விமான நிலையம் பயணியரின் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த

சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us