நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நல்லிபாளையம், கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஹிந்தி, நுண்கலை, யோகா மற்றும் பசுமைத் திட்ட மன்றம் துவங்கப்பட்டன.
பள்ளி தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். நிறுவனர்கள் ராஜன், செயலாளர் வாசுதேவன், பொருளாளர் அப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, நிர்வாகிகள் அனைவரும் மன்றத்தை துவக்கி வைத்தனர். மன்றம் மூலம் பல்வேறு போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர்கள் பாஸ்கர், சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.