sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

14ல் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதல்வரால் திறப்பு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்

/

14ல் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதல்வரால் திறப்பு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்

14ல் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதல்வரால் திறப்பு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்

14ல் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதல்வரால் திறப்பு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்


ADDED : ஆக 11, 2025 06:17 AM

Google News

ADDED : ஆக 11, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ''தமிழகத்தில், 33 ஆண்டுகளுக்கு பின், புதிய மத்-திய கூட்டுறவு வங்கியாக, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை, வரும், 14ல், முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கிறார்,'' என, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் கூறினார்.

இதுகுறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக முதல்வர் நடவடிக்கையால், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இரண்டாக பிரிக்கப்பட்டு, கடந்த, 2024 முதல் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்-டது. அகில இந்திய அளவில், மொத்தம், 351 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. நாமக்கல்

மத்திய கூட்டுறவு வங்கி, 352வது

வங்கியாக உருவாக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, நாமக்கல் - மோகனுார் சாலையில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டு-றவு வங்கி தலைமை அலுவலகம் அமைக்கப்-பட்டு, மேலாண் இயக்குனர், பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து, நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கிக்கு, டிபாஸிட்கள் மற்றும் கடன்கள் உள்-ளிட்ட, 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான வணிகம் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், மாவட்டம் முழுவதும், 30 கிளைகள் இயங்கும்.

இந்த கிளைகள் மூலம், 165 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 393 பால் உற்பத்தியா-ளர்கள் கூட்டுறவு சங்கங்கள், 5 கூட்டுறவு நகர வங்கிகள், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 26 பணியா-ளர்கள் கூட்டுறவு சங்கங்கள் என, மொத்தம், 746 கூட்டுறவு அமைப்புகளுக்கு இந்த வங்கி கிளை-களில் வங்கி சம்பந்தமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும்.

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடக்க விழா, வரும், 14 காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. சென்னையில் இருந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் வங்கியை திறந்து வைக்கிறார். துணை முதல்வர் உதயநிதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமை செய-லாளர் முருகானந்தம் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us