/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு பூஜை
/
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு பூஜை
ADDED : ஆக 11, 2025 06:17 AM
நாமக்கல்: நாமக்கல், ஏ.எஸ்.பேட்டையில் இருந்து போதுப்-பட்டி செல்லும் சாலையில், காமாட்சி அம்மன் நந்தவனம் அமைந்து உள்ளது.
இங்கு, 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர், ஆண்டு-தோறும் ஆடிப்பெருக்கை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையில், ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் சிறப்பு பூஜையை நடத்தி வரு-கின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு ஏ.எஸ்.பேட்டை பகவதி அம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் சிறுவர்கள், மோகனுார் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீராடினர். இதையடுத்து, தீர்த்தம் எடுத்துக்-கொண்டு கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். தொடர்ந்து, பிடிமண் எடுத்து சுவாமிகள் செய்து வழிபாடு நடத்தினர். நேற்று மதியம், 12:00 மணிக்கு மகா பூஜை நடந்தது. இதில், ஆடுகள் பலியிட்டு பூஜை செய்யப்பட்டது. அனைவ-ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த பூஜையில் பெண்கள் யாரும் கலந்துகொள்-ளவில்லை. வழக்கம்போல், நேற்றும் ஆண்கள் மட்டுமே இந்த பூஜையை நடத்தினர். சமையல் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஆண்களே மேற்கொண்டனர். உணவு உட்-கொண்ட பின், மீதமுள்ள சோறு, இலைகள் உள்-ளிட்ட அனைத்தையும் அங்கேயே குழிவெட்டி புதைத்தனர். இதையடுத்து, மண்ணால் செய்யப்-பட்ட சுவாமி உருவங்களை எடுத்து காவிரி ஆற்றில் கரைத்தனர்.