sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு பூஜை

/

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு பூஜை

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு பூஜை

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு பூஜை


ADDED : ஆக 11, 2025 06:17 AM

Google News

ADDED : ஆக 11, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல், ஏ.எஸ்.பேட்டையில் இருந்து போதுப்-பட்டி செல்லும் சாலையில், காமாட்சி அம்மன் நந்தவனம் அமைந்து உள்ளது.

இங்கு, 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர், ஆண்டு-தோறும் ஆடிப்பெருக்கை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையில், ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் சிறப்பு பூஜையை நடத்தி வரு-கின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு ஏ.எஸ்.பேட்டை பகவதி அம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் சிறுவர்கள், மோகனுார் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீராடினர். இதையடுத்து, தீர்த்தம் எடுத்துக்-கொண்டு கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். தொடர்ந்து, பிடிமண் எடுத்து சுவாமிகள் செய்து வழிபாடு நடத்தினர். நேற்று மதியம், 12:00 மணிக்கு மகா பூஜை நடந்தது. இதில், ஆடுகள் பலியிட்டு பூஜை செய்யப்பட்டது. அனைவ-ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த பூஜையில் பெண்கள் யாரும் கலந்துகொள்-ளவில்லை. வழக்கம்போல், நேற்றும் ஆண்கள் மட்டுமே இந்த பூஜையை நடத்தினர். சமையல் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஆண்களே மேற்கொண்டனர். உணவு உட்-கொண்ட பின், மீதமுள்ள சோறு, இலைகள் உள்-ளிட்ட அனைத்தையும் அங்கேயே குழிவெட்டி புதைத்தனர். இதையடுத்து, மண்ணால் செய்யப்-பட்ட சுவாமி உருவங்களை எடுத்து காவிரி ஆற்றில் கரைத்தனர்.






      Dinamalar
      Follow us