sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

படிப்பை நிறுத்தியவருக்குஇலவச தொழிற்பயிற்சி

/

படிப்பை நிறுத்தியவருக்குஇலவச தொழிற்பயிற்சி

படிப்பை நிறுத்தியவருக்குஇலவச தொழிற்பயிற்சி

படிப்பை நிறுத்தியவருக்குஇலவச தொழிற்பயிற்சி


ADDED : செப் 09, 2011 01:27 AM

Google News

ADDED : செப் 09, 2011 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'பள்ளி, கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது' என, கல்லூரி முதல்வர் லிங்கம்மாள் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், இலவச சமுதாய தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்படி, திடக்கழிவு மேலாண்மையில் மண்புழு வளர்ப்பு, உயிர் உரம் தயாரிக்கும் முறை, காளான் வளர்ப்பு, வினியோகம், தையல் மற்றும் நவீன உடை தயாரிப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது.

இப்பயிற்சியில், பள்ளி, கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மட்டும் சேர்ந்து கொள்ளலாம். பயிற்சிக்கென வயது வரம்பு எதுவும் இல்லை. பயிற்சிகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு பெரியார் பல்கலை மூலம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.இச்சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், வங்கிக் கடன் பெறுவதற்கும் இச்சான்றிதழ் உதவும். பயிற்சி குறித்து மேலும் தகவல் அறிய, 99432-15887, 98652-84914 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us