sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் சிறைபிடிப்பு

/

கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் சிறைபிடிப்பு

கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் சிறைபிடிப்பு

கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் சிறைபிடிப்பு


ADDED : செப் 14, 2011 01:16 AM

Google News

ADDED : செப் 14, 2011 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த தனியார் பஸ்சை, மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில், மக்கள் இரண்டு மணி நேரமாக சிறைபிடித்து வைத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சேலத்தில் இருந்து திருச்செங்கோடு வழியாக ஈரோடு செல்லும் செந்தில்ராஜா என்ற தனியார் பஸ்ஸில், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்ததால் பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்தனர்.

இரண்டு மணி நேரம், தனியார் பஸ் மல்லசமுத்திரம் பஸ்ஸ்டாண்டில்நிறுத்தப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.சேலத்தில் இருந்து திருச்செங்கோடு வழியாக ஈரோடு செல்லும் செந்தில்ராஜா என்ற தனியார் பஸ்ஸில், சேலத்தில் இருந்து ஈரோடு செல்ல, 20 ரூபாய் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. நேற்று மதியம் 2 மணிக்கு செந்தில்ராஜா தனியார் பஸ்சில், மல்லசமுத்திரத்தை சேர்ந்த பயணிகள் வந்துள்ளனர். அவர்களிடம், 20 ரூபாய் கட்டணம் வசூல் செய்தனர். அதனால், ஆத்திரமடைந்த அவர்கள், மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்ததும், பஸ்சை சிறை பிடித்தனர்.தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் இருவரும், 'இதுபோன்ற தவறு இனி ஏற்படாது' என உறுதி அளித்ததை தொடர்ந்து, சிறைபிடித்து வைத்திருந்த பஸ்சை விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us