sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேசிய இயற்கை மருத்துவ தினம் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

/

தேசிய இயற்கை மருத்துவ தினம் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தேசிய இயற்கை மருத்துவ தினம் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தேசிய இயற்கை மருத்துவ தினம் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி


ADDED : நவ 19, 2025 01:59 AM

Google News

ADDED : நவ 19, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், தேசிய இயற்கை மருத்துவ தினத்தையொட்டி, அரசு ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு பேரணி நாமக்கல்லில் நடந்தது.

நாமக்கல்-மோகனுார் சாலையில் உள்ள, பழைய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை, நாமக்கல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

பழைய மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன் துவங்கிய பேரணி, மோகனுார் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை, ஸ்டேட் பேங்க் வழியாக சென்று மீண்டும் துங்கிய இடத்தில் முடிந்தது.

பேரணியில், இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம், அதன் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக துண்டு பிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது. அரசு இயற்கை மருத்துவர் செந்தில்குமார், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜேஸ்கண்ணன்,

உதவி சித்த மருத்துவர் தமிழ்செல்வன், கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மாதையன், டாக்டர் விஜயலட்சுமி, மாணவ, மாணவியர் உள்பட, 200க்கும் மேற்பட்டோர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us