sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புதிய கிரிமினல் சட்டங்கள் நாளை அமல்: வக்கீல் சங்கம் முழு ஆதரவு

/

புதிய கிரிமினல் சட்டங்கள் நாளை அமல்: வக்கீல் சங்கம் முழு ஆதரவு

புதிய கிரிமினல் சட்டங்கள் நாளை அமல்: வக்கீல் சங்கம் முழு ஆதரவு

புதிய கிரிமினல் சட்டங்கள் நாளை அமல்: வக்கீல் சங்கம் முழு ஆதரவு


ADDED : ஜூன் 30, 2024 01:41 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ள மத்திய அரசின், 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, நாமக்கல்லில் நடந்த மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகில பாரத வக்கீல்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பாஸ்கர் தலைமை வகிததார். நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். நாமக்கல் மூத்த வக்கீல் சீனிவாசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சங்க பொதுச்செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். தென்மண்டல பொதுச்செயலாளர் கேசவன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிக்குமார் ஆகியோர் தீர்மானங்களை விளக்கி பேசினர்.

கூட்டத்தில், மத்திய அரசு நாளை முதல், இந்தியாவில் புதிதாக, 3 கிரிமினல் சட்டங்களை அமல்படுத்துகிறது. இதனை, பாரதிய நியாய சங்கிதா, பாரதிய சாக்ஷியா அபிநயம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சங்கிதா ஆகிய, 3 சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மத்திய அரசு, வக்கீல்களின் சேமநல நிதியை, 50,000 ரூபாயில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மலைவாழ் மக்களின் பாதுகாப்பு சட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us