sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வேலைக்கு செல்வது மட்டுமின்றி முயற்சியை கைவிடாமல் மேலும் உயர வேண்டும்: கலெக்டர்

/

வேலைக்கு செல்வது மட்டுமின்றி முயற்சியை கைவிடாமல் மேலும் உயர வேண்டும்: கலெக்டர்

வேலைக்கு செல்வது மட்டுமின்றி முயற்சியை கைவிடாமல் மேலும் உயர வேண்டும்: கலெக்டர்

வேலைக்கு செல்வது மட்டுமின்றி முயற்சியை கைவிடாமல் மேலும் உயர வேண்டும்: கலெக்டர்


ADDED : ஜூலை 06, 2025 12:52 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், ''மாணவியர் உயர்கல்வி பயின்று வேலைக்கு செல்வது மட்டுமின்றி, உங்களது முயற்சியை கைவிடாமல், வாழ்வில் மேன்மேலும் உயர வேண்டும்,'' என, கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.-----------------

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், புதிதாக சேரும் மாணவியர்களுக்கான உயர்கல்வி குறித்த ஒருவார கால அறிமுக பயிற்சி திட்டம் துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். பொருளாதார துறை தலைவர் புவனேஸ்வரி வரவேற்றார். கலெக்டர் துர்கா மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:

உயர்நிலை பள்ளியிலிருந்து உயர்கல்வி சூழலுக்கு மாணவர்கள் சீராக மாறுவதற்கும், அவர்களின் கல்லுாரி பயணத்தை வெற்றிகரமாக வழிநடத்த தேவையான தகவல்களை பெறுவதற்கும், வடிவமைக்கப்பட்ட விரிவான திட்டம். மேலும், கல்வி அமைப்பு, விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், பாடத்திட்டம், தேர்வு, மதிப்பீட்டு முறைகள், கிடைக்கக்கூடிய வளங்கள், மாணவர் ஆதரவு சேவைகள் மற்றும் மாணவர்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு அரசு திட்டங்கள், மாணவர்களைப் பழக்கப்படுத்துதல் போன்ற கல்லுாரி வாழ்க்கைக்கு ஒரு விரிவான அறிமுகத்தை வழங்குகிறது.

இப்பயிற்சியில், நிறுவனத்தின் பொதுவான தகவல், தொலைநோக்கு மற்றும் நோக்கத்துடன் மாணவர்களுக்கு பரிச்சயப்படுத்துதல், கல்வி அமைப்பு, கல்வி நாட்காட்டி, பாடநெறி பதிவு மற்றும் தர நிர்ணய முறை போன்ற முக்கியமான அம்சங்கள் வழங்கப்படுகிறது. மேலும், மாணவர் ஆதரவு அமைப்புகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, மனித உரிமைகள், ராகிங் எதிர்ப்பு, பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரசு கலை கல்லுாரியில் படிக்கும், 1,750 மாணவியர்கள் 'புதுமைப் பெண்' திட்டத்தின் கீழ், மாதந்தோறும், 1,000 உதவித்தொகை பெற்று வருகின்றனர். மாணவியர் உயர்கல்வி பயின்று, வேலைக்கு செல்வது மட்டுமல்லாமல், உங்களது முயற்சியை கைவிடாமல், வாழ்வில் மேன்மேலும் உயர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us