sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி குண்டுமல்லி கிலோ ரூ.600க்கு விற்பனை

/

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி குண்டுமல்லி கிலோ ரூ.600க்கு விற்பனை

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி குண்டுமல்லி கிலோ ரூ.600க்கு விற்பனை

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி குண்டுமல்லி கிலோ ரூ.600க்கு விற்பனை


ADDED : அக் 10, 2024 01:37 AM

Google News

ADDED : அக் 10, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி

குண்டுமல்லி கிலோ ரூ.600க்கு விற்பனை

ப.வேலுார், அக். 10--

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, நேற்று ப.வேலுாரில் நடந்த பூக்கள் ஏலத்தில் குண்டுமல்லி கிலோ, 600 ரூபாய்க்கு விற்பனையானது.

பரமத்தி வேலுார் தாலுகாவுக்குட்பட்ட பிலிக்கல்பாளையம், சாணார்பாளையம், ப.வேலுார் பரமத்தி, கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். சில வாரங்களாக விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்கள் தேவை அதிகரித்துள்ளதால், விலையும் உயர்ந்துள்ளது.

ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்தில், கடந்த வாரம், 400 ரூபாய்க்கு விற்ற குண்டுமல்லி கிலோ, நேற்று, 600 ரூபாய்க்கும்; 100 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 350 ரூபாய்க்கும்; 100 ரூபாய்க்கு விற்ற அரளி, 500 ரூபாய்க்கும் விற்பனையாகின. இதேபோல் ஒரு கிலோ, 80 ரூபாய்க்கு விற்ற சாமந்தி பூ, 300 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்ற முல்லைப்பூ, 720 ரூபாய்க்கும் விற்பனையாகின. பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us