ADDED : செப் 19, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அருகே, திம்மநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி மகன் குணசேகரன், 58; இவர், நேற்று தன் டூவீலரில் மங்களபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சைக்கிளில் சென்ற அதே பகுதியை சேர்ந்த ராமன், 70, மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவரும் பலத்தகாயமடைந்தனர். இருவரையும் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் குணசேகரன் இறந்தார். மங்களபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.