sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தமிழகத்தில் ஒரு வாரம் பலத்த மழை எச்சரிக்கை 9 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்

/

தமிழகத்தில் ஒரு வாரம் பலத்த மழை எச்சரிக்கை 9 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்

தமிழகத்தில் ஒரு வாரம் பலத்த மழை எச்சரிக்கை 9 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்

தமிழகத்தில் ஒரு வாரம் பலத்த மழை எச்சரிக்கை 9 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்


ADDED : அக் 12, 2024 07:31 AM

Google News

ADDED : அக் 12, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில், ஒரு வாரத்திற்கு பலத்த மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும்,

15ம் தேதி, சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா - கோவா கடற்கரை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வட-மேற்கு திசையில் நகர்ந்து, மஹாராஷ்டிரா கடற்கரை பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வலுப்பெற்று, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை, மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்ற-ழுத்த தாழ்வு

மண்டலமாக நிலவும். தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ-டுக்கு சுழற்சி

நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று, இடி, மின்னலுடன்

லேசான மழை பெய்யக்கூடும்.

சேலம், கரூரில்...திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு

உள்ளது என, என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர் மாவட்-டங்களில், 13ம் தேதியான நாளை கனமழைபெய்ய வாய்ப்புள்-ளது.

இதேபோல, 14ம்தேதி விழுப்புரம், கடலுார், மயிலாடு-துறை, நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரியில் கனமழை முதல் மிக

கனமழையும் பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி,

அரியலுார், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்ச் அலர்ட்

திருப்பத்துார், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை ஆகிய

ஒன்பது மாவட்டங்களில், 15ம் தேதி மிக கனமழை பெய்-யக்கூடும். அதாவது, இந்த மாவட்டங்களில், 12 முதல் 20 செ.மீ., வரை மழை

பெய்யும் என்பதால், 'ஆரஞ்ச்' அலர்ட் விடுக்கப்பட்-டுள்ளது.

கடலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்

அறிவிக்-கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாட்-களில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும்,

வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us