sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பார்சல் டெலிவரி தாமதம் ரூ.1 லட்சம் இழப்பீடுக்கு உத்தரவு

/

பார்சல் டெலிவரி தாமதம் ரூ.1 லட்சம் இழப்பீடுக்கு உத்தரவு

பார்சல் டெலிவரி தாமதம் ரூ.1 லட்சம் இழப்பீடுக்கு உத்தரவு

பார்சல் டெலிவரி தாமதம் ரூ.1 லட்சம் இழப்பீடுக்கு உத்தரவு


ADDED : நவ 20, 2024 02:26 AM

Google News

ADDED : நவ 20, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஆயத்த ஆடை விற்பனை நிலையம் நடத்தி வருபவர் பிரேமா, 43. இவர், 2023 அக்.,ல் தீபாவளி விற்பனைக்கு, பெங்களூரில் உள்ள மொத்த ஆயத்த ஆடை நிறுவனத்தில், 33,075 ரூபாய்க்கு ஆடைகளை வாங்கினார்.

இந்த பார்சலை, தமிழகத்தின் கிளை நிறுவனமான, பெங்களூரில் உள்ள, 'எம்.எஸ்.எஸ்., டிரான்ஸ்போர்ட்' என்ற பார்சல் நிறுவனம் மூலம், குமாரபாளையம் முகவரிக்கு அனுப்பி வைக்க பணம் செலுத்தினார்.

ஆனால், தீபாவளி விற்பனைக்கு வந்து சேர வேண்டிய பார்சல் வரவில்லை.

இதனால் மனமுடைந்த பிரேமா, கடந்த மார்ச்சில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் பார்சல் நிறுவனம் மீது வழக்கு தொடுத்தார்.

விசாரணை முடிந்து, நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் அடங்கிய அமர்வு, நேற்று தீர்ப்பளித்தது.

அதில், 'பார்சல் நிறுவனத்தின் சேவை குறைபாடால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவு தொகை, 5,000 ரூபாய் என, மொத்தம், ஒரு லட்சத்து, 5,000 ரூபாயை, நான்கு வாரங்களுக்குள் பார்சல் நிறுவனம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us