/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கார் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
/
கார் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : செப் 05, 2024 02:48 AM
நாமக்கல்,: 'விபத்துக்குள்ளான கார் உரிமையாளருக்கு, இன்சூரன்ஸ் நிறு-வனம், 80,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மனுவகாட்டுபா-ளையத்தை சேர்ந்தவர் சுந்தரம், 54. இவருக்கு சொந்தமான, 'மாருதி ஆம்னி' காருக்கு, 'யுனிவர்சல் சேம்போ ஜெனரல் இன்-சூரன்ஸ்' நிறுவனத்தில், 2021 அக்., முதல், ஓராண்டுக்கு பிரீ-மியம் செலுத்தி இன்சூரன்ஸ் செய்திருந்தார். 2022 ஜூனில், இவ-ரது வாகனம் விபத்துக்குள்ளானது. கார் பழுதை சரி செய்ய, இன்-சூரன்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற, சர்வீஸ் சென்டரில் விட்டுள்ளார்.அங்கு காரை சரி செய்ய, 1.25 லட்சம் ரூபாய் செலவாகும் என, தெரிவித்துள்ளனர். இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இதற்கான தொகையை கேட்டதற்கு, 'சேதம் மதிப்பு, 75 சதவீதத்திற்கும் மேல் இருந்தால் பணம் தர முடியாது. அதனால், காரை கொடுத்-துவிட்டு, மொத்த இழப்பீடாக, 1.59 லட்சம் பெற்றுக்கொள்-ளலாம்' என தெரிவித்துள்ளனர்.
இதனை கார் உரிமையாளர் ஒப்புக்கொள்ளாமல், காரை முழுமை-யாக சரி செய்து, ஒரு லட்சத்து, 19,778 ரூபாய்க்கு சர்வீஸ் சென்டர் ரசீது வழங்கியுள்ளது. அதனால், சேத தொகையை வழங்க வேண்டும் என, கேட்டுள்ளார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம், 60,000 ரூபாய் மட்டுமே சர்வீஸ் சென்டருக்கு வழங்கி உள்ளது. இதனால், 2023, பிப்ரவரியில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், சுந்தரம் வழக்கு தொடுத்தார்.
விசாரணை முடிந்து, மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ் தலை-மையிலான அமர்வு, நேற்று தீர்ப்பளித்தது. அதில், 'காரின் உரி-மையாளர், சர்வீஸ் சென்டருக்கு வழங்கிய, 59,778 ரூபாய், அவ-ருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சிரமங்களுக்கு இழப்பீடாக, 20,000 ரூபாய் என, மொத்தம், 79,778 ரூபாயை, நான்கு வாரங்க-ளுக்குள் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.