sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ப.வேலுாரில் வாழைத்தார் விலை உயர்வு

/

ப.வேலுாரில் வாழைத்தார் விலை உயர்வு

ப.வேலுாரில் வாழைத்தார் விலை உயர்வு

ப.வேலுாரில் வாழைத்தார் விலை உயர்வு


ADDED : நவ 07, 2024 01:27 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுாரில் வாழைத்தார் விலை உயர்வு

ப.வேலுார், நவ. 7--

ப.வேலுார் தாலுகா, பாண்டமங்கலம், பொத்தனுார், நன்செய் இடையாறு, குப்பிச்சிபாளையம், மோகனுார், ப.வேலுார், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லிகோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர்.

இங்கு, பூவன், பச்சைநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள் அதிகம் பயிரிடுகின்றனர். இவை, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர்.

நேற்று நடந்த ஏலத்திற்கு, 500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், 100 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், தற்போது, 300 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 300 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி, 250 ரூபாய்க்கும், மொந்தன் காய், 2 ரூபாய்க்கு விற்றது தற்போது, 5 ரூபாய்க்கும் விற்பனையானது.

வாழைத்தார் வரத்து குறைவாலும், சுப முகூர்த்தம் நாட்கள் தொடர்ந்து வருவதாலும், வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us