sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வெயில் தொடங்கியதால் அப்பளம் உற்பத்தி 'சுறுசுறு'

/

வெயில் தொடங்கியதால் அப்பளம் உற்பத்தி 'சுறுசுறு'

வெயில் தொடங்கியதால் அப்பளம் உற்பத்தி 'சுறுசுறு'

வெயில் தொடங்கியதால் அப்பளம் உற்பத்தி 'சுறுசுறு'


ADDED : டிச 26, 2024 01:20 AM

Google News

ADDED : டிச 26, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், டிச. 26-

ராசிபுரம் சுற்று வட்டாரத்தில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. 20 நாட்களுக்கு மேல் தினமும் மழை பெய்ததால் பல்வேறு பணிகள் முடங்கின.

நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி பகுதிகளில் மரவள்ளி கிழங்கு மாவில் அப்பளம் உற்பத்தி செய்வது மிகவும் பிரபலம். இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிசை தொழிலாக அப்பள உற்பத்தியை செய்து வருகின்றனர். வேகவைத்து, வெயிலில் நன்றாக காய வைத்து தான் அப்பளம் தயாரிக்கப்படுகிறது. தொடர் மழை காரணமாக நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதியில் அப்பளம் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகைக்கு பின் அப்பள உற்பத்தி முடங்கியிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக வெயில் சுளீர் என அடிப்பதால், நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டியில் அப்பள உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.

அதேபோல், தொடர் மழையால் ராசிபுரம் சுற்று வட்டா பகுதியில் உள்ள வேளாண் நிலங்களில்

தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், களை எடுப்பது, உழவு, பூச்சி மருந்து அடிப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய முடியாமல் தவித்து

வந்தனர்.

தற்போது வெயில் அடிக்க தொடங்கியதால், தேங்கியிருந்த மழைநீரும் வறண்டுவிட்டது. நேற்று ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள், உழவு, களை எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். முக்கியமாக மானாவாரி விவசாயிகள் விதைப்பு பணியில்

ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us