/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிடப்பில் சாலைப்பணி: வாகன ஓட்டிகள் அவதி
/
கிடப்பில் சாலைப்பணி: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 14, 2025 04:45 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் யூனியன், வேலணம்பாளையம் கிராமத்தில், கடந்த, 2024 செப்., 24ல், பிரதம மந்திரி கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தில், 97.78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2.800 கி.மீ., தொலைவிற்கு சாலை அமைக்கும் பணி தொடங்கி-யது. பழைய தார்ச்சாலையை அகற்றி, அதன் மேல் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில்
மேற்படி பணிகளை தொடராமல் அப்படியே விட்டுவிட்டனர்.இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி, விவசா-யிகள், பொதுமக்கள் அதிகளவில் சாலையை பயன்படுத்தி வரு-கின்றனர். ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்ட நிலையில் உள்-ளதால் மக்கள் நடக்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி வரு-கின்றனர்.
டூவீலர்களில் செல்வோர், சற்று வேகமாக சென்றால் கூட தவறி கீழே விழுந்து செல்ல வேண்டிய சூழலில் உள்ளனர். ஓராண்டு காலமாக கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.