sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மக்கள் குறைதீர் கூட்டம் 435 மனுக்கள் வழங்கல்

/

மக்கள் குறைதீர் கூட்டம் 435 மனுக்கள் வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டம் 435 மனுக்கள் வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டம் 435 மனுக்கள் வழங்கல்


ADDED : செப் 30, 2025 01:12 AM

Google News

ADDED : செப் 30, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 435 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பரிசீலனை செய்த கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற, 60 மாணவ, மாணவியருக்கு, 70,500 ரூபாய் மதிப்பில், பரிசு தொகை மற்றும் தகுதி சான்றிதழ்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஒரு மாற்றுத்திறனாளிக்கு, 15,750 ரூபாய் மதிப்பில், மடக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சுமன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் கோகிலா, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us