/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரூ.90,500 மதிப்பில் நல உதவி
/
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரூ.90,500 மதிப்பில் நல உதவி
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரூ.90,500 மதிப்பில் நல உதவி
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரூ.90,500 மதிப்பில் நல உதவி
ADDED : டிச 30, 2025 04:55 AM
நாமக்கல்: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை-தீர்க்கும் நாள் கூட்டத்தில், 23 பயனாளி களுக்கு, 90,500 ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவி
கள் வழங்கப்பட்டன.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்-தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு, மொத்தம், 572 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தாட்கோ சார்பில், தமிழக துாய்மை பணியாளர் நல வாரியம் மூலம், 23 பேருக்கு கல்வி உதவித்தொகை, இயற்கை மரண நிதி என, 90,500 ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உத-விகள் வழங்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சரவணன், தனித்துணை கலெக்டர் சுந்தரராஜன், அரசுத்துறை அலுவலர் கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

