sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வீட்டுமனை கேட்டு மக்கள் மனு

/

வீட்டுமனை கேட்டு மக்கள் மனு

வீட்டுமனை கேட்டு மக்கள் மனு

வீட்டுமனை கேட்டு மக்கள் மனு


ADDED : நவ 04, 2025 02:03 AM

Google News

ADDED : நவ 04, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், வெண்ணந்துார் யூனியன், ஓ.சவுதாபுரம், மணல்காடு கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மணல்காடு கிராமத்தை சேர்ந்த எங்களுக்கு, கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், ஆதிதிராவிடர் நலத்துறையால், 70 வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. தற்போது, ஒரே குடும்பத்தில், இரண்டு, மூன்று குடும்பங்கள் உருவாகிவிட்டன. திருமணமான குடும்பத்தினருக்கு, தனியாக வீடு இருந்தால் மட்டும் தான், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

அதனால், அதே பகுதியில் இலவச வீட்டுமனை வழங்க ஏதுவாக, வகைப்பாட்டில் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்டு அளவீடு செய்து நத்தம் வீட்டு மனைகளாக வகைப்பாடு செய்து, முறையான பயனாளிகள் தேர்வு செய்து இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us