sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'ஏரிக்கரை பலவீனமாக உள்ளதால் மண் அள்ள அனுமதி அளிக்க கூடாது'

/

'ஏரிக்கரை பலவீனமாக உள்ளதால் மண் அள்ள அனுமதி அளிக்க கூடாது'

'ஏரிக்கரை பலவீனமாக உள்ளதால் மண் அள்ள அனுமதி அளிக்க கூடாது'

'ஏரிக்கரை பலவீனமாக உள்ளதால் மண் அள்ள அனுமதி அளிக்க கூடாது'


ADDED : அக் 28, 2025 01:47 AM

Google News

ADDED : அக் 28, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், 'தேசிய நெடுஞ்சாலை பணிக்கு, ஈச்சங்காடு பெரிய ஏரியில் இருந்து மண் அள்ள அனுமதி அளிக்க கூடாது' என, கிராம விவசாயிகள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம், பள்ளக்குழி பஞ்.,க்குட்பட்ட ஈச்சங்காடு பெரிய ஏரியில், தேசிய நெடுஞ்சாலைக்கு மண் அள்ளுவதற்கு ஆட்சேபனை இல்லை என, கிராம மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை பணிக்கு ஏரியில் மண் அள்ளுவதற்கு, விவசாயிகள், பொதுமக்கள் விரும்பவில்லை. காரணம், 2020ல், குடிமராமத்து பணியின்போது, முதன் முறையாக விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ள அனுமதித்தோம்.

அதேபோல், 2024ல், குடி

மராமத்து பணியின்போது, டிராக்டரில் மண் அள்ளப்பட்டது. அதன் காரணமாக, கரை பலவீனமாக உள்ளது. மதகும் செயலற்றுள்ளதால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். அருகில் உள்ள கரட்டுவளவு, செண்பகமாதேவி, கசப்பானுார் ஆகிய ஏரிகளில் உள்ள மண்ணை, தேசிய நெடுஞ்சாலைக்கு அள்ளிவிட்டனர். தற்போது, வண்டல் மண் தேவைக்கு இந்த ஏரி மட்டுமே உள்ளது. மக்கள் நலன் கருதி, தேசிய நெடுஞ்சாலை பணிக்காக மண் அள்ள உரிமம் வழங்க வேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us