sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்திற்கு கருத்து தெரிவிக்க அவகாசம் கோரி மனு

/

ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்திற்கு கருத்து தெரிவிக்க அவகாசம் கோரி மனு

ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்திற்கு கருத்து தெரிவிக்க அவகாசம் கோரி மனு

ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்திற்கு கருத்து தெரிவிக்க அவகாசம் கோரி மனு


ADDED : ஜூலை 26, 2025 01:29 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள அணைப்பாளையம் கிராமத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு தொடக்கத்தில் இருந்து, அ.தி.மு.க.,-கம்யூ.,-ம.தி.மு.க.,-தே.மு.தி.க.,-பா.ஜ., வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழுவினர் என்ற பெயரில், கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஸ் ஸ்டாண்டை மாற்றக்கூடாது என, உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் மாவட்ட கலெக்டரின் நேரடி விசாரணைக்கு பின், பொதுமக்கள் ஆட்சேபனை அல்லது கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று கந்தசாமி, ஜோதிபாசு ஆகியோர் நாமக்கல் கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், கருத்து அல்லது ஆட்சேபனை தெரிவிக்க, 28 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை. 25ல் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு முகாமுக்கு சென்றுவிட்டதால் அன்றும் கருத்து தெரிவிக்க முடியவில்லை. எனவே, கருத்துகளை பொதுமக்கள் பதிவு செய்ய, ஆக., 1 வரை அவகாசம் வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us