/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
/
பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 26, 2025 04:24 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில், நெகிழி சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. செயல் அலுவலர் வனிதா தலைமை வகித்தார். இதில், டவுன் பஞ்., தலைவர் சித்ரா தனபால், பிளாஸ்டிக் தடுப்பு விழிப்பு-ணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கிய பேரணி, சோமேஸ்வரர் கோவில் தெப்பகு-ளத்தில் முடிந்தது.
தொடர்ந்து, தெப்பகுளம் பகுதியில் பிளாஸ்டிக் தடுப்பு குறித்தும், நெகிழி சேகரிப்பு குறித்தும் பொது மக்களுக்கு விழிப்-புணர்வு ஏற்படுத்தியதுடன், மஞ்சபை குறித்து விழிப்புணர்வு ஏற்-படுத்தப்பட்டது. துணைத்தலைவர் ரகு, டவுன் பஞ்., வார்டு உறுப்பினர்கள், மாணவ, மாணவியர், துாய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.* இதேபோல், மல்லசமுத்திரம் மேல்முகம் பஞ்சாயத்தில், பி.டி.ஓ.,க்கள் பாலவிநாயகம், அருளப்பன் தலைமையில் விழிப்-புணர்வு பேரணி நடந்தது. தொடர்ந்து, சிக்கிரிச்சிபாளையம் ஏரி பகுதி மற்றும் சாலையோர பகுதியில் இருந்த, 29.700 கி.கி., நெகிழி குப்பை மற்றும் 3.500 கி.கி., மட்கும் குப்பை சேகரிக்கப்-பட்டது. தொடர்ந்து, 'தடை செய்யப்பட்ட நெகிழியை பயன்ப-டுத்த மட்டோம்' என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.