/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீடு புகுந்து திருட்டு போலீசார் விசாரணை
/
வீடு புகுந்து திருட்டு போலீசார் விசாரணை
ADDED : டிச 30, 2025 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனி பகுதியில், நேற்று முன்தினம் மதியம், பூட்டப்பட்-டிருந்த வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர், நகை, பணத்தை திருடி சென்றார்.
இதையறிந்த அப்பகுதி மக்கள், அங்கு பொருத்தப்-பட்டிருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில், 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், அப்பகுதியில் நோட்டமிட்டு செல்வது பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத-ளத்தில் பரவி வருகிறது. பள்ளிப்பாளையம் போலீசார், மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

