/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாலிபர்கள் இடையே மோதல் 4 பேருக்கு போலீசார் 'காப்பு'
/
வாலிபர்கள் இடையே மோதல் 4 பேருக்கு போலீசார் 'காப்பு'
வாலிபர்கள் இடையே மோதல் 4 பேருக்கு போலீசார் 'காப்பு'
வாலிபர்கள் இடையே மோதல் 4 பேருக்கு போலீசார் 'காப்பு'
ADDED : டிச 19, 2024 07:17 AM
பள்ளிப்பாளையம்: பெரியார் நகர் பகுதியில் வாலிபர்கள் இடையே நடந்த தாக்கு-தலில், பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரை கைது செய்தனர்.
பள்ளிப்பாளையம் அருகே, ஜீவாசெட் பகுதியை சேர்ந்தவர் குமார், 40; சட்ட விரோத மது பாட்டில் விற்பனையை தடுக்க கோரி, கடந்த, 30ல் சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும், பல-முறை போலீசிலும் புகார் கொடுத்துள்ளார். இவர் தன் நண்பர்க-ளுடன், கடந்த, 13 இரவு பெரியார் நகர் படித்துறையில் இருந்த போதே, அதே பகுதியை சேர்ந்த பூபதி, 26, விக்னேஷ், 26, ஆகி-யோரிடையே பிரச்னை ஏற்பட்டு, அடிதடி வரை சென்றது. இதில், பலத்த காயமடைந்த குமார், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசில், இருதரப்பிலும் புகாரளிக்கப்பட்டது. கடந்த, 15ல் இரு-தரப்பிலும், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று இரவு, இருதரப்பிலும் இருந்து பூபதி, 26, விக்னேஷ், 26, சக்-திவேல், 26, பாலு, 25, ஆகிய, 4 பேரை கைது செய்தனர்.

