/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாநகராட்சி ஆபீசில் களை கட்டிய பொங்கல் விழா
/
நாமக்கல் மாநகராட்சி ஆபீசில் களை கட்டிய பொங்கல் விழா
நாமக்கல் மாநகராட்சி ஆபீசில் களை கட்டிய பொங்கல் விழா
நாமக்கல் மாநகராட்சி ஆபீசில் களை கட்டிய பொங்கல் விழா
ADDED : ஜன 12, 2025 03:37 AM
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், நேற்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முதலில், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மேயர் கலாநிதி தலைமை வகித்தார். துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்-தனர். தொடர்ந்து, பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில், மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கமி-ஷனர் மகேஸ்வரி, உறுப்பினர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் உற்சாகமாக பங்கேற்-றனர்.பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில், உறுப்பினர்கள் ஒரு அணியாகவும், கமிஷனர் மகேஸ்வரி தலைமையில், அலுவ-லர்கள் ஒரு அணியாகவும் பங்கேற்றனர். அதில், கமிஷனர் தலை-மையிலான அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து, ஆண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில், மேயர் கலாநிதி தலைமையில் ஒரு அணியினர், மாநகராட்சி சுகா-தார அலுவலர் திருமூர்த்தி தலைமையில் ஒரு அணியினர் போட்-டியிட்டனர். பலம் கொண்ட இரு அணிகளும் இழுத்ததில் கயிறு அறுந்து, மேயர் அணியினர் கீழே விழுந்தனர். அதனால், அங்கு சிரிப்பலை எழுந்தது. இருந்தும், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

