ADDED : ஜூன் 20, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு : திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில், ஆனி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதில், கைலாசநாதர் மற்றும் நந்திபகவானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யபட்டு மகா தீபாராதனை நடந்தது.இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.