/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பருவமழை பாதிப்பில் இருந்து நெற்பயிரை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
/
பருவமழை பாதிப்பில் இருந்து நெற்பயிரை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பருவமழை பாதிப்பில் இருந்து நெற்பயிரை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பருவமழை பாதிப்பில் இருந்து நெற்பயிரை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ADDED : அக் 30, 2025 01:42 AM
நாமக்கல், 'வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், தற்போது சம்பா பருவத்தில், 4,500 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக, பரவலாக மழை பெய்து வருகிறது. பருவ மழை காலங்களில், வயல்களில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வடித்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழையால் மண்ணில் இருந்து அடித்து செல்லப்படும் நைட்ரஜன், பொட்டாசியம் சத்துக்களை ஈடுசெய்ய, 25 சதவீதம் கூடுதலாக யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.
பயிர்களில் நுண்ணுாட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் காணப்பட்டால், யூரியா மற்றும் நுண்ணுாட்ட உரங்களை இலை வழியாக தெளிக்கவும். வடகிழக்கு பருவ மழையில், அதிகமாக ஓடும் நீரை பண்ணைக்குட்டைகள் மூலம் சேமித்து, நிலத்தின் நீர் மட்டத்தை உயர்த்தலாம். பருவ மழையின்போது ஏற்படும் காலநிலை மாற்றத்தால், பயிர்களில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பருவமழையினால் பாதிப்பு அடையும் இளம்பயிர் மற்றும் துார் கட்டும் பயிர்களை பாதுகாப்பதற்கு, ஏக்கருக்கு, ஒரு கிலோ துத்தநாக சல்பேட், இரண்டு கிலோ யூரியாவை, 200 லி., நீரில் ஒரு இரவு வைத்து, மறுநாள் மேல் உள்ள தெளிந்த நீரை மழை நின்றவுடன் தெளிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

